கூரை
நேசித்த என் அருகில்
நீ இல்லை....
உன்னோடு நான் கரைத்த நிமிடங்கள்
என்னுள் கரையாத காவியமாய்....
நீயம் நானும் ஒற்றைக் கூரையில்
வாழ்ந்திட நினைத்தோம்....
ஆனால் - இப்பொழுது
நீ எங்கோ
நான் எங்கோ
இருந்தாலும் மனதின் ஓரம் ஒரு ஆறுதல்
ஆகாயம் என்னும் ஒற்றைக் கூரைக்கடியில் நாம் இருவரும்......
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக