nanrasithathu.blogspot.com
செவ்வாய், 28 ஜூன், 2011
சுதா நீ என்றும்.......
சுதா நீ என்றும்
என் நினைவில் சதா...
நீ மரணிக்க வில்லை
எங்கள் நினைவில்
ஜெனித்து இருகிறாய்..
நீ குடிப்பதை பார்த்து
தண்ணியிலே கண்டம்
தண்ணியிலே கண்டம்
என்றார்கள்
அது கடல் தண்ணி
என்று தெரியாமல் போனதேன்???
ஆழியில் போனாலும்
உன் நினைவுகள்
அழிந்து போயிடுமா என்ன???
வாரத்தின் கடைசி
நாட்களில்மட்டும்
என்னைஅழைக்கவில்லை
உன்ஆயுசின்
கடைசி நாட்களில்தான்
என்னை அழைத்திருக்கிறாய்...
கடலுக்குவேண்டாதது
எல்லாம்துப்பிவிடுமாமே?
உன்னை மட்டும்
மூன்று நாள் "நீ"
புணர்ந்தது
போதும்என்று துப்பிவிட்டதோ??
கடலும் ஓர் தாசி தான்.....
கடவுளின் அற்புதங்கள்
குறைந்து விட்டதை
உன்விடயத்தில் கண்டேன்
இதுபோல் மரண செய்திகளாலும்
துக்க செய்திகளினால் மட்டுமே
இறைவன் பிழைத்த கொண்டிருக்கிறான்...
என் கூட பிறந்தசகோதிறர்கள் கூட
அண்ணா அண்ணா
என்றுஅழகாய் இப்படி
விளித்ததில்லை
என் சகோதிரனுக்கு நீ classmate .......
எனக்கு நீ glassmate ....
சற்று பொறு விரைவில்
இணைவோம் as a heaven mate ...
சுதா நீ என்றும்
எங்கள் நினைவில் சதா...
நீ மரணிக்க வில்லை
எங்கள் நினைவில் ஜெனித்து இருகிறாய்..
----சந்திரா
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக