nanrasithathu.blogspot.com

புதன், 27 ஜூலை, 2011

வசீகரமான உன் ஆண்மை....

உனைக் கண்ட முதல் தருணம்
சுற்றம் முழுதும்
வெண்புகையாய் மறைந்து போயின !!!!!
அங்ஙனம் என்னுள் தோன்றியதை
எங்ஙனம் எழுத என எண்ணி
மனதில் உன்னை
எழுதி வைத்தேன் .......

'பார்த்த மாத்திரத்திலேயே காதல் கனியுமா 'என
காவியங்களில் படித்த போது சிரித்த நிமிடங்கள்
இன்று என் நிலை கண்டு சிரிக்கிறதே !!!!!
கண்டதும் காதல் சாத்தியமே என சத்தியம்
செய்யும் அளவு மாறிவிட்டேனே உன்னால்.............

என் குழந்தைத்தனம் ரசிக்கும்
இன்னொரு குழந்தையாய் நீ என்னுள் !!!!
கலைந்த படுக்கையும் நொய்ந்த தலையணையும்
கூறுதே உன் மீதான என் காமத்தை !!

நவரசங்களில்
உனைக் கண்டதும்
வெட்கம் மட்டும்
என் முகத்தில் தலை தூக்குதே !!!!!!

அழகான பெண்கள் கூடத்தான்
கவிஞர்களின் பிறப்பிடம்
ம்ம் !! மறுக்கப் போவதில்லை நான் .,
அடியேனின் பிறப்பிடம்
வசீகரமான உன் ஆண்மை
இதை நீ மறுப்பாயா??????

---கல்பனா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக