nanrasithathu.blogspot.com

செவ்வாய், 28 ஜூன், 2011

காதல் கணவன்!!!!!!!

காதல் கணவன்!
* முதல் பார்வையிலேயே
என்னை உன் பக்கம்
ஈர்த்தவனே...
புரிந்து கொண்டேன்
நீ எனக்கானவன்
என்று!

* என் கரம் பற்றி
உன்னை காதலிக்கிறேன்
கண்ணே என்றவனே...
புரிந்து கொண்டேன்
என் கைத்தலம் பற்ற
போகிறவன் நீதானென்று!

* உன்னைப் பார்க்காமல்
நொடிப் பொழுதும்
இருக்க முடியாததால்
நாள் பார்த்து,
மங்கள நாண் பூட்டி,
மனைவி ஸ்தானத்தை
தந்ததும் எப்படி மறந்தாய்?

* அன்பான அரவணைப்புகளையும்
மனதைத் தொடும்
பேச்சுக்களையும்...

* வேலை நேரத்திலும்
போன் செய்து சாப்பிட்டாயா
என்ற கரிசனங்களையும்...

* மறக்காது நீ
வாங்கி வந்து சூடிவிடும்
மல்லிகையையும்...

* இந்த சேலையில்
நீ தேவதை என்ற
வர்ணிப்புகளையும்...

* உன் கையால்
செய்த உணவு அமிர்தம்
என்ற பாராட்டுகளையும்...

* பிறந்த நாளை மறக்காது
முத்தத்துடன் நீ
தரும் பரிசுகளையும்...

* வீட்டினுள்ளேயே அடைந்து
கிடக்கிறாயே... வாயேன்
காற்றாட பேசிக்கொண்டு
நடந்துவிட்டு வரலாம்
எனற பரிவுகளையும்...

* எப்படி மறந்தாயென்று
இன்றளவும் என்னால்
புரிந்து கொள்ள முடியவில்லை!

* என் காதல் கணவனே...
காதலிக்கும் போது மட்டுமல்ல,
திருமணத்திற்கு பின்னும்
நீ என்னை
காதலித்துக் கொண்டிருப்பதையே
விரும்புகிறேன்!
— ஆர்.சத்யா ராஜசேகர்,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக