nanrasithathu.blogspot.com

புதன், 22 ஜூன், 2011

கூரை


நேசித்த என் அருகில்

நீ இல்லை....

உன்னோடு நான் கரைத்த நிமிடங்கள்

என்னுள் கரையாத காவியமாய்....

நீயம் நானும் ஒற்றைக் கூரையில்

வாழ்ந்திட நினைத்தோம்....

ஆனால் - இப்பொழுது

நீ எங்கோ

நான் எங்கோ

இருந்தாலும் மனதின் ஓரம் ஒரு ஆறுதல்

ஆகாயம் என்னும் ஒற்றைக் கூரைக்கடியில் நாம் இருவரும்......




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக