"உயிர்க்க விடு"...!
கண்மணியே....!
காட்டுத் தீயாய்... எனைப்
பற்றி எரிக்கும் உந்தன் மீதான
காதல்....!
உன்னை மட்டும் "தீண்டாமல்"
போவதெப்படி....?
காதலே...!
கழனி உழுதவனை...
கவிஞனாக்கும் வல்லமை
உனக்கு உண்டெனில்....
கரையா கல்நெஞ்சக்
காதலி...!
அவள் இதயம் புக
உன்னாலாகாதா...?
உருகிய இரும்பாய்...
உருகும் இதயமே....!
உன்னவளிடம் ...
உன் காதல் சொல்ல....
உள்வாங்கும் மர்மமென்ன...?
என்னை மொய்க்கும் காதல்
உன்னை மொய்க்காதோ...!
என் இதயம் கிழிக்கும்
உன் நினைவுகள்....!
உனக்குள் புதையாதோ...!
உன்னோடு பேசும்
ஒவ்வொரு முறையும்....
சொல்லத் துடிக்கும்
உதடுகளின் உயிர்ப்பை
மரணிக்க செய்யும் காரணம் எது...?
என்னில் நிலைக் கொண்ட
காதல் புயலே...! ஒன்று
கரை கடந்து விடு...! இல்லை
கரை கடக்க விடு...!!
"மையம்" அசையா
மாயம் என்ன...?
யாதுமாகி என்னில்
பூத்திட்ட உயிர்ப் பூவே...!
உன்னை சுவாசிக்கிறேன்...!
உன்னையே நேசிக்கிறேன்...!!
உயிர்த்து விடு.... என்னை
உயிர்க்க விடு...!
இன்னும் எத்தனை நாள்
இப்படி... ?!
சொல்லாமலே....!!!
காட்டுத் தீயாய்... எனைப்
பற்றி எரிக்கும் உந்தன் மீதான
காதல்....!
உன்னை மட்டும் "தீண்டாமல்"
போவதெப்படி....?
காதலே...!
கழனி உழுதவனை...
கவிஞனாக்கும் வல்லமை
உனக்கு உண்டெனில்....
கரையா கல்நெஞ்சக்
காதலி...!
அவள் இதயம் புக
உன்னாலாகாதா...?
உருகிய இரும்பாய்...
உருகும் இதயமே....!
உன்னவளிடம் ...
உன் காதல் சொல்ல....
உள்வாங்கும் மர்மமென்ன...?
என்னை மொய்க்கும் காதல்
உன்னை மொய்க்காதோ...!
என் இதயம் கிழிக்கும்
உன் நினைவுகள்....!
உனக்குள் புதையாதோ...!
உன்னோடு பேசும்
ஒவ்வொரு முறையும்....
சொல்லத் துடிக்கும்
உதடுகளின் உயிர்ப்பை
மரணிக்க செய்யும் காரணம் எது...?
என்னில் நிலைக் கொண்ட
காதல் புயலே...! ஒன்று
கரை கடந்து விடு...! இல்லை
கரை கடக்க விடு...!!
"மையம்" அசையா
மாயம் என்ன...?
யாதுமாகி என்னில்
பூத்திட்ட உயிர்ப் பூவே...!
உன்னை சுவாசிக்கிறேன்...!
உன்னையே நேசிக்கிறேன்...!!
உயிர்த்து விடு.... என்னை
உயிர்க்க விடு...!
இன்னும் எத்தனை நாள்
இப்படி... ?!
சொல்லாமலே....!!!
nandri- ithayasaaral.blogspot.com