nanrasithathu.blogspot.com

புதன், 3 நவம்பர், 2010

நியூட்டனின் மூன்றாம் விதி...

நியூட்டனின் மூன்றாம் விதி...

பிரிவின் வேதனை சுடுகிறது
என்பவனுக்கு
பிரிவின் பின்னர்தான்
திளைக்க திளைக்க
நினைவில் நனைகிறேன்
என்பதை எப்படி புரியவைப்பேன்..

நிராகரித்தலின்
வேதனையை அனுபவித்ததுண்டா
என்பவனிடம்
எப்படி பகிர ..
ஒரு
நிராகரித்தலின் பின்தான்
திகட்ட திகட்ட
அன்பை சுவைப்பதை...

எனக்கு மட்டும்
ஏன்
இப்படியெல்லாம் நிகழுது
என்றவனுக்கு
எல்லாவற்றிலும் மீண்டஅனுபவத்தை
எப்படி விளக்குவேன் ..?

ஐய்யகோ!..
புலிகளை அழித்துவிட்டனரே..!
கதறி துடித்த தோழனுக்கு
தெரியவில்லை
பதுங்கி பாய்வதுதான்
புலிகளின் குணமென்று....!!!

கொத்து குண்டுகள்
மொத்தமாய் போட்டவனுக்கு
யாரும் சொல்லவில்லையா
நியூட்டனின் மூன்றாம் விதியை..?
 
nandri- krpsenthil

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக