nanrasithathu.blogspot.com

சனி, 6 நவம்பர், 2010

Choooo. Chweeeeet காதல் கவிதைகள்

Choooo. Chweeeeet காதல் கவிதைகள்

"கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை"
என்ற பாடலை கேட்கையில் சிரித்து கொள்வேன்.
அது எப்படி கற்கள் காலுக்கு மெத்தையாகும் என்று?..
உன்னுடன் ரயில்வே தண்டவாளத்தில்
நடந்து செல்கையில்தான் அந்த பாடல்
எந்த அளவிற்கு உண்மை என்று உணர்கிறேன்....



தயவு செய்து இவ்வளவு அருகில்
என்னிடம் வராதே. அப்புறம்
"ச்சீ.. போடா... நீ ரொம்ப கெட்ட பையன்" என்று
நீ என்னை திட்டினால்
அதற்கு நான் பொறுப்பல்ல....



நான் உனக்கு
என்ன பரிசு கொடுத்தாலும்
அது அத்தனையிலும்
என் காதல் மட்டுமே நிரம்பி இருக்கும்


எப்போதோ வெட்டி எடுக்கப்பட்ட
மரத்துண்டிலிருந்தும் பூக்கள் பூக்கிறது,
நீ அதை கட்டிப் பிடித்து நிற்கையில்....

நீ எனக்கு கொடுக்கும் பறக்கும் முத்தத்தில்
கலந்திருக்கும் காற்றை மட்டுமல்ல
காதலையும் என்னால் மட்டுமே
உணர முடியும்.

என்னை கட்டிப்பிடித்து நடக்கும் போது
ஏன் தள்ளாடுகிறாய்? என்று கேட்கிறாய்.
நீ என்றைக்காவாது மது அருந்தி, நடந்து பார்...
பிறகு தெரியும்.

யார் உன்னை காயப்படுத்தினாலும்
உன் கண்ணில் இருந்து கண்ணீர்தான் வழியும்.
ஆனால் நான் உன்னை
சிறிதாக காயப்படுத்தினாலும்
உன் இதயத்திலிருந்து ரத்தமே வழிகிறதே..
அட... அந்த அளவிற்கா என்னை காதலிக்கிறாய்?
 
 
nandri- kavithaikadhalan

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக