nanrasithathu.blogspot.com

சனி, 30 ஏப்ரல், 2011

பகவான் பாபா!

பகவான் பாபா...
நிலம் புரள -
ஒருநீள அங்கி -
அணிந்து நடந்த -
ஓர்ஆன்ம வங்கி;
இந்த வங்கியின்இருப்பு -
அருள்;பொருள்;அவற்றைக்கொண்டு -
அதுஅகற்றியது -
மன்பதையின்மருள்; இருள்!

'ஓம்’ என்பதுஓரெழுத்து;
அதன் -பதவுரைதான் -
பகவான்பாபா எனும் ஈரெழுத்து;
அந்த -ஈரெழுத்து -
நீரெழுத்து அல்ல;
நிலையெழுத்து;
அதை ஓதிநின்றார்க்கு மாறியது தலையெழுத்து!

பாபா - நம்பவ நோய் தீர்க்க -
விண்ணில் இருந்து -
இந்தமண்ணில் இறங்கிய மருந்து!
ஆம்;
அவர் நமது -நோயைத் தின்ற மருந்து;
அந்தமருந்தைத் தின்றுவிட்டதே நோய்!
அய்யகோ!
அடாத -
இந்தஅக்கிரமத்தைஆரிடம் சொல்லி அழுவோம் போய்?

பிறந்ததுபிறவாதது;
பிறப்பும் இறப்பும்பிரமத்திற் கேது?
வாழ்வில் -அடிபடாத பேர்க்கு -
இதுபிடிபடாது!
பாபா -பலருக்கும் நிழல் பரப்ப...
விரிந்து நின்றவிருட்சம்;
இதன்வேரடி - அந்தஷீரடி!
மகாராஷ்டிரத்தில்மறைந்தது;
ஆந்திராவில்அவதரித்தது;

நீரில்லார்க்குநீரும் -
சோறில் லார்க்குச்சோறும் -
உதவிஉபகரித்தது;
அதையா - காலம்அபகரித்தது?!

புட்டபர்த்தியில் -
ஒரு குடைக் கீழ்புவியைக் கொண்டுவந்து -
கட்டிக் காத்தவர் பாபா;
அதைக்கலைக்கா திருக்க வேண்டும் ரூபா!
----வாலி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக